இன்று ஞாயிறும் திங்களும் கண்சிமிட்டும் நந்நாள்-அந்த
பேரொளியில் பிறந்தாள் மங்கை
தாமரை இதழ் பொற்பாதம்-அங்கம்
தங்கமென திகழ -கன்னத்தில் குங்கும சிகப்பு
செவ்விதழ் உதடு அதில் -அவள்
புன்முறுவல் புன்னகை அழகு
கண்களில் தோன்றும் கனிவு
அவள் புவிக்கு வந்த தேவதை
மலர்களில் உயர்ந்த மலர் பல உண்டு
அவள் புன்முறுவலில் பூக்கும் புன்னகை மலர் -உயர்வு
இறைவனும் மழலையும் ஒன்று -இல்லை
மழலையில் இறைவனை காணலாம் -இன்று
அவள் கைவிரல் காட்டும் அபிநயம்
அவள் வாய்மொழி மீட்டும் ரீங்காரம் -
மாற்று உண்டோ? இப்புவியில்
கண்களால் அவள் செயும் குறும்பு -கண்ட
எனக்கு இன்று பசிக்கு விடுமுறை
அவள் கால்கள் ஆடும் நாட்டியம் -அவள்
கால் கொலுசின் சிணுங்கல் -
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை தமிழில்
துயில் கொள்ளும் குழந்தயின் அழகு
அவள் செல்ல சிணுங்கல்
கொஞ்சும் பார்வை -இவர்களல்லவோ தேவதைகள்
விண்ணிலிருந்து மண்ணில் வந்த தாரகைகள்
மழலைகள் புன்னகைக்கு ஈடாகுமோ? புவியில் ஏதும்?
வ.ந. ஹரிகுமார்
நண்பா...பட்டைய கிளப்புர....
ReplyDeleteThank you very much ,My next blog ill come soon ,read and tel your opinion.......
ReplyDelete