Tuesday, September 28, 2010

மழலை என் மகள்

இன்று ஞாயிறும் திங்களும் கண்சிமிட்டும் நந்நாள்-அந்த
பேரொளியில் பிறந்தாள் மங்கை
தாமரை இதழ் பொற்பாதம்-அங்கம்
தங்கமென திகழ -கன்னத்தில் குங்கும சிகப்பு
செவ்விதழ் உதடு அதில் -அவள்
புன்முறுவல் புன்னகை அழகு
கண்களில் தோன்றும் கனிவு
அவள் புவிக்கு வந்த தேவதை
மலர்களில் உயர்ந்த மலர் பல உண்டு
அவள் புன்முறுவலில் பூக்கும் புன்னகை மலர் -உயர்வு
இறைவனும் மழலையும் ஒன்று -இல்லை
மழலையில் இறைவனை காணலாம் -இன்று
அவள் கைவிரல் காட்டும் அபிநயம்
அவள் வாய்மொழி மீட்டும் ரீங்காரம் -
மாற்று உண்டோ? இப்புவியில்
கண்களால் அவள் செயும் குறும்பு -கண்ட
எனக்கு இன்று பசிக்கு விடுமுறை
அவள் கால்கள் ஆடும் நாட்டியம் -அவள்
கால் கொலுசின் சிணுங்கல் -
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை தமிழில்
துயில் கொள்ளும் குழந்தயின் அழகு
அவள் செல்ல சிணுங்கல்
கொஞ்சும் பார்வை -இவர்களல்லவோ தேவதைகள்
விண்ணிலிருந்து மண்ணில் வந்த தாரகைகள்
மழலைகள் புன்னகைக்கு ஈடாகுமோ? புவியில் ஏதும்?
..
ரிகுமார்

2 comments:

  1. நண்பா...பட்டைய கிளப்புர....

    ReplyDelete
  2. Thank you very much ,My next blog ill come soon ,read and tel your opinion.......

    ReplyDelete