Thursday, September 16, 2010

மண்ணின் மனம்

மாலை பொழுது மனதை வருடும் தென்றல்
மெல்லிய சாரல் மனதை மயக்கும் தூறல்
தேனிசை பாடல் தெள்ளென தெளிக்க -
வேறென்ன வேண்டும் -மானிடா உனக்கு?
முதல் சாரலில் வரும் மண்ணின் மணம்
அதை ரசிப்பதற்கு வேண்டும் -மனதில் மனம்
கைகுத்தல் அரிசி மங்கையர் கைப்பக்குவம்
மறக்க முடிமா மானிடா உனக்கு?
கண்ணே மணியே முத்தே பவிழமே -இவை யாவும்
ஈடாகுமோ? மழலையின் பால் முகத்திற்கு?
இதை விட இன்பமுண்டோ இப்புவியில் ?-
இல் என்று சொல்வான் அவன் மானிடனா?
பெண் சுகம் அல்ல பலவீனம் -அவள்
கண்ணீர் என்றும் ஆண் அவனுக்கு -பலவீனம்
புன்னகைக்கும் பூ அவள் -மெல்லிய சாரல் அவள்
பாசத்தால் அவள் ஒரு காவிரி - பொங்கி எழுந்தால்
அவள் ஒரு கண்ணகி ---

. . ஹரிகுமார்

No comments:

Post a Comment